ந ரூப1மஸ்யேஹ த1தோ21லப்4யதே1 நான்தோ1 ந சா1தி3ர்ன ச1 ஸம்ப்1ரதி1ஷ்டா2 |

அஶ்வத்11மேனம் ஸுவிரூட4மூல மஸங்க3ஶஸ்த்1ரேண த்3ருடே4ன சி2த்1வா ||3||
11: ப13ம் த1த்11ரிமார்கி31வ்யம் யஸ்மின்க3தா1 ந நிவர்த1ந்தி1 பூ4ய: |

1மேவ சா1த்3யம் பு1ருஷம் ப்1ரப1த்3யே யத1: ப்1ரவ்ரத்1தி1: ப்1ரஸ்ருதா1 பு1ராணீ ||4||

ந--—இல்லை; ரூபம்-—வடிவம்; அஸ்ய--—இதன்; இஹ-—இந்த உலகில்; ததா--—அப்படியே; உபலப்யதே--—உணரப்படுகிறது; ந--—இல்லை; அந்தஹ—-முடிவு; ந--—இல்லை; ச--—மேலும்; ஆதிஹி---ஆரம்பம்; ந—--ஒருபோதும் இல்லை; ச--மேலும்; ஸம்ப்ரதிஷ்டா—--அடிப்படை; அஶ்வத்தம்--—புனித அத்தி மரம்; ஏனம்--—இது; ஸு-விரூட-மூலம்---ஆழ்ந்த-வேரூன்றிய; அஸங்க-ஶஸ்த்ரேண--—பற்றற்ற கோடரியால்; த்ருடேன—--வலுவான; சித்வா----வெட்டப்பட்டு; ததஹ---பின்னர்; பதம்--—இடம்; தத்----அது; பரிமார்கிதவ்யம்--—தேட வேண்டும்; யஸ்மின்---—எங்கே; கதாஹா—-கடந்து சென்றபின்; ந--இல்லை; நிவர்தந்தி--—திரும்புவர்; பூயஹ---மீண்டும்; தம்--—அவரிடம்; ஏவ--—நிச்சயமாக; ச--—மற்றும்; ஆத்யம்—--அசல்;- புருஷம்--—ஒப்புயர்வற்ற இறைவன்; ப்ரபத்யே--—அடைக்கலம் புகுந்த பிறகு; யதஹ---அங்கிருந்து; ப்ரவ்ரித்திஹி---செயல்பாடு; ப்ரஸ்ரிதா--—பாய்கிறது; புராணீ—--மிகவும் பழமையானது

అనువాదం

BG 15.3-4: இந்த புனித அத்தி மரத்தின் ஆரம்பம் முடிவு, தொடர்ச்சியான இருப்பு மற்றும் இந்த புனித அத்தி மரத்தின் உண்மையான வடிவம் இந்த உலகில் உணரப்படவில்லை. ஆனால் இந்த ஆழமான வேரூன்றிய மரத்தை ஒரு வலுவான கோடாரியால் வெட்ட வேண்டும். நீண்ட காலத்திற்கு முன்பு பிரபஞ்சத்தின் செயல்பாடுகளை வெளிப்படுத்திய ஒப்புயர்வற்ற கடவுளான மரத்தின் அடிப்பகுதியை ஒருவர் தேட வேண்டும். அவரிடம் அடைக்கலம் புகுந்த பிறகு மீண்டும் யாரும் இவ்வுலகிற்கு வருவதில்லை.

వ్యాఖ్యానం

உடலமைந்த ஆத்மாக்கள் 'ஸம்ஸாரத்தில்' அதாவது பிறப்பு இறப்பு சுழற்சியில் தொடர்ந்து நகர்ந்து கொண்டு இந்த புனித அத்தி மரத்தின் தன்மையை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றன. அவர்கள் மரத்தின் மொட்டுகள் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருப்பதைக் காண்கிறார்கள், அதாவது, புலன்களின் பொருள்களால் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் மற்றும் அவற்றுக்கான ஆசைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். தங்களது ஆசைகளை நிறைவேற்றுவதற்கான அவரது முயற்சிகள் தான் இந்த மரத்தை மீண்டும் மீண்டும் வளர வைக்கிறது என்பதை அறியாமல் இந்த ஆசைகளை நிறைவேற்ற அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர். ஆசைகள் பூர்த்தி செய்யப்பட்டால், அவை பேராசையின் வடிவத்தில் இரட்டிப்பு தீவிரத்துடன் திரும்பி வருகின்றன. அவை பூர்த்தி செய்யப்படாவிட்டால், ​​அவை கோபத்தை உண்டாக்கி புத்தியைக் குழப்புகின்றன மற்றும் அறியாமையை ஆழமாகுகின்றன.

புனித அத்தி மரத்தின் இந்த புதிர் சிலரால் மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது என்று ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார். ஆன்மா புரிந்துகொள்வது எல்லாம் ‘நான் ஹரிபிரசாத்தின் மகன் ராம்பிரசாத், நான் இந்த நாட்டின் இந்த ஊரில் வசிக்கிறேன். நான் அதிகபட்ச மகிழ்ச்சியைப் பெற விரும்புகிறேன்.எனவே, எனது உடல் அடையாளத்தின்படி நான் செயல்படுகிறேன், ஆனால் மகிழ்ச்சி என்னைத் தவிர்க்கிறது, மேலும் நான் குழப்பமடைகிறேன்.’ என்பதை மட்டுமே. மரத்தின் மூலம் மற்றும் தன்மையைப் புரிந்து கொள்ளாமல், உயிர்கள் பயனற்ற செயல்களில் ஈடுபடுகின்றன. ஜட ஆசைகளை நிறைவேற்றுவதற்காக, மனிதன் சில சமயங்களில் பாவச் செயல்களைச் செய்து, கீழ் யோனியில் பிறக்கிறான் அல்லது உடல் துறையில் கீழ் பகுதிகளுக்குச் செல்கிறான். சில நேரங்களில், பொருள் இன்பத்திற்கான நாட்டம் ஒருவரை மரத்தின் இலைகளுக்கு ஈர்க்கிறது, அவை வேதங்களின். இந்தச் சமயச் சடங்குகளில் ஈடுபடுவதன் மூலம், ஒருவர் மேல்நோக்கி தேவலோக இருப்பிடங்களுக்குச் செல்கிறார், அறச்செயல்களின் பலன்கள் முடிந்தவுடன் பூவுலகுக்குத் திரும்ப அனுப்பப்படுகிறார். இதனால்தான், சைதன்ய மகாபிரபு கூறினார்

கி1ருஷ்ண பூ4லி ஸேய் ஜீவ அனாதி3-பஹிர்முக2

அத2ஏவ மாயா தா2ரே தே3ய ஸம்ஸார-து3ஹ்க2

3பு4 ஸ்வர்கே3 உடா2ய, க3பு4 நரகே1 டு3பா3

3ண்ட்3ய-ஜனே ராஜா யேன நதீ3தே1 சு1பா4

(சை11ன்ய ச1ரித1ம், மத்4ய லீலா 20.117–118)

'ஆன்மா எண்ணிலடங்கா காலத்திலிருந்து கடவுளை மறந்து இருப்பதால், ஜட ஆற்றல் அதை உலகத் துன்பங்களுக்கு ஆளாக்குகிறது. சில சமயங்களில், அது ஆன்மாவை தேவலோக இருப்பிடங்களுக்கு உயர்த்துகிறது, மற்ற நேரங்களில் அதை நரகப் பகுதிகளுக்குக் கீழே தள்ளுகிறது. இது பழங்காலத்தில் குற்றவாளிகளுக்கு அரசர்கள் செய்த சித்தரவதைக்கு ஒப்பானது.’ சித்திரவதையின் ஒரு வடிவமாக, பழங்கால மன்னர்கள் ஒரு நபரின் தலையை அவர் மூச்சுத்திணரும்வரை தண்ணீரில் மூழ்கடித்து, பின்னர் அவரை ஒரு சில மூச்சுத்திணறல்களுக்கு விடுவிப்பார்கள். ஆன்மாவின் நிலையும் இதைப் போன்றதுதான். அது தேவலோக இருப்பிடங்களில் தற்காலிக நிவாரணம் பெற்று மீண்டும் பூமியில் கைவிடப்படுகிறது. இவ்வாறே முடிவில்லா வாழ்நாட்களை கடக்கிற ஆன்மாவின் பொருள் இன்பத்திற்கான அனைத்து முயற்சிகளும் மரத்தை மேலும் விரிவுபடுத்துவதில் மட்டுமே விளைகின்றன. மேலும், நிலத்திற்கு அதிக வேர்களை அனுப்புகின்றன. ஸ்ரீ கிருஷ்ணர் இந்த மரத்தை வெட்டும் கோடாரி மனச்சோர்வு உணர்ச்சி வயப்படாத நடுநிலை உணர்வு என்கிறார். அஸங் என்ற வார்த்தைக்கு பற்றின்மை என்று பொருள், மேலும் இது ஆன்மாவின் முடிவில்லா துன்பங்களுக்கு தீர்வாகும். ஜட இயற்கையின் மூன்று முறைகளால் தூண்டப்படும் ஆசைகள் பற்றின்மையின் கோடரியால் அழிக்கப்பட வேண்டும். இந்த கோடாரி சுய அறிவிலிருந்து உருவாக்கப்பட வேண்டும்: 'நான் ஒரு நித்திய ஆன்மீக உயிரினம், இந்த ஜட உடல் அல்ல. நான் தேடும் நித்திய தெய்வீக பேரின்பம் ஜடப் பொருட்களிலிருந்து ஒருபோதும் அடையப்படாது. நான் என்னை உடல் என்று நினைத்து நிறைவேற்ற முயற்சி செய்யும் பொருள் ஆசைகள் என் இருப்பை வாழ்க்கை மற்றும் இறப்பு ஸம்ஸாரத்தில் மட்டுமே நிலைநிறுத்துகின்றன. இந்த மனநிறைவு மற்றும் ஓய்வு கிடைக்காது.’ ஒருவருக்கு பற்றின்மை உருவாகும்போது, ​​​​மரத்தின் வளர்ச்சி நின்று அது வாடத் தொடங்குகிறது.

இந்த மரத்தின் அடிப்பகுதியை நாம் தேட வேண்டும், இது வேர்களுக்கு மேல் அமைந்துள்ளது மற்றும் எல்லாவற்றையும் விட உயர்ந்தது. மரத்தின் அந்த அடிப்பகுதியே ஒப்புயர்வற்ற கடவுள். ஸ்ரீ கிருஷ்ணர் முன்பு கூறியது போல: ‘அனைத்து படைப்புகளுக்கும் நானே மூலகாரணம். எல்லாம் என்னிடமிருந்து வருகிறது. இதைப் பரிபூரணமாக அறிந்த ஞானிகள் மிகுந்த நம்பிக்கையுடனும் பக்தியுடனும் என்னை வழிபடுகிறார்கள்.’ (வசனம் 10.8) எனவே, மரத்தின் அசல் மூலத்தைக் கண்டுபிடித்து, இந்த வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ள விதத்தில் நாம் அதைச் சரணடைய வேண்டும்: ‘எவரிடமிருந்து நீண்ட காலத்திற்கு முன்பு பிரபஞ்சம் உருவானதோ, அவருக்கு என்னை நான் சமர்ப்பிக்கிறேன்.'

இந்த வழியில், முன்பு புரிந்துகொள்ள முடியாத மற்றும் புரிந்துகொள்ள கடினமாக இருந்த மரத்தை முறியடிக்க முடியும். ஸ்ரீ கிருஷ்ணர் முன்பு சொன்னார்: ‘என் தெய்வீக சக்தியான மாயாவைக் கடப்பது மிகவும் கடினம், ஆனால் என்னிடம் அடைக்கலம் புகுபவர்கள் அதை எளிதாகக் கடக்கிறார்கள்.’ (வசனம் 7.14) எனவே ஒப்புயர்வற்ற கடவுளிடம் தஞ்சம் புகுந்த உடன் அஸ்வத்த மரம் வெட்டப்படும், நாம் மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்ப மாட்டோம், மரணத்திற்குப் பிறகு அவருடைய தெய்வீக இருப்பிடத்திற்குச் செல்வோம். சரணடைதல் செயல்முறை என்ன என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் பின்வரும் வசனத்தில் வெளிப்படுத்துகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
15. புருஷோத்தம யோகம்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency